பொத்துவில் பிரதேசத்தில் காணி அளவீடு தொடர்பில் கருத்து வெளியிடுகையில், ரிஷாட் பதியுதீன் இதனைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவரது ஊடகப்பிரிவு இன்று (21) அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“பலாத்காரமாகவும் அடாத்தாகவும் அங்கு சென்று, மக்களின் பூர்வீகக் காணிகளை அளவீடு செய்வதால்தான் இவ்வாறான பிரச்சினைகள் எழுகின்றன. இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, முதலில் பிரதேச மக்களோடு பேசவேண்டும்.
“பிரதேச செயலாளர், கிராம சேவையாளர் ஊடாக பள்ளவாசல் நிர்வாகம், மக்களின் பிரதிநிதிகளுக்கு இதனை வெளிவுப்படுத்த வேண்டும். அத்துடன், இந்த விடயத்தில் அவர்களின் கருத்துக்களையும் உளவாங்கியிருக்க வேண்டும்.
“மக்களின் பூர்வீக விடயங்கள், உறுதிப்பத்திரம், இதுதொடர்பிலான ஆவணங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும். இவ்வாறு முறையான செயற்பாடுகளை மேற்கொண்ட பின்னரே, இதுதொடர்பிலான நடவடிக்கை எடுப்பது சரியானது” என்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துரையிடுக